ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமைய உள்ள புதிய டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு செப்.28 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) கார்களை உற்பத்தி செய்யும் ஆலை, பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைபோல பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி ஆலைக்கும் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், தோல் மற்றும் காலணி உற்பத்தி சிறந்து விளங்குகிறது. அதை சர்வதேச தரத்தில் உயர்த்தி அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் இந்த மெகா காலணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“