நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்ட சில கட்சிகளில், தேசியக் கட்சியான பாஜகவுக்கும் ஒன்று. ஆனால், களத்தில் போட்டி என்னவோ பாஜகவுக்கும், நோட்டாவுக்குமாகத் தான் இருந்தது. இறுதியில் கட்சியே இல்லாத சுயேட்சை தினகரன், அபாரமான வெற்றியைப் பதிவு செய்தார். மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற தினகரனை பற்றி மக்கள் பேசியதை விட, பாஜக - நோட்டா போட்டியை பற்றித் தான் அன்று அதிகம் விவாதித்தனர்.
இந்த நிலையில், கால் டாக்சி நிறுவனம் ஒன்று, வாடிக்கையாளர்களை கவர புதுவிதமான விளம்பர நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தாமரை போலே நோட்டாவை விட குறைவான டாக்சி கட்டணங்கள்" என குறிப்பிட்டுள்ளது.
எப்படியெல்லாம் யோசிக்குறாய்ங்க!!