scorecardresearch

17 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

இருவரும் 18 வயது நிரம்பாத நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

17 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

புதுக்கோட்டையில் 17 வயது பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, மும்பைக்கு தப்பி சென்ற நபர் மீது  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி – புதுக்கோட்டை இடையே உள்ள கீரணூா் கிராமத்தில் 17 வயது  நபர்  ஒருவர் தன்னுடன்  படித்து வந்த  அதே வயதுடைய பெண்ணை காதலித்து வந்துள்ளார்.   அந்த பெண்ணும்,   அவரும்  ஒரே பள்ளியில் படிக்கும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழகத்தினால்  அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் தான், அந்த நபர்  மும்பை தேடிவேலைக்கு செல்வதாக கூறி அந்த பெண்ணை ஏமாற்றி விட்டு மும்பைக்கு சென்றுள்ளார்.  அதன் பின்பு, பெண் கா்ப்பமாக இருப்பதை உணா்ந்த பெண் வீட்டாா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

இது குறித்து காவல் துறையினா் கூறுகையில், பெண் 9ம் வகுப்பும், ஆண் 10ம் வகுப்பும் படித்துள்ளனா். இருவரும் 18 வயது நிரம்பாத நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மைனர் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி  ஏமாற்றிய நபரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.   இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Teenager booked for raping in trichy