Advertisment

அதிகரித்து வரும் வெப்பம்... சென்னையில் மின் தேவை 25% அதிகரிப்பு

இந்த ஆண்டு கோடை வெயிலின் வெப்பம் கடுமையாக இருந்ததால், சென்னை மக்கள் ஏ.சி, மற்றும் குளிர்சாதனப் பொருட்களை அதிகம் பயன்படுத்தியதால், சென்னையின் மின் தேவை 25% அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
sasa

சென்னை மக்கள் ஏ.சி, மற்றும் குளிர்சாதனப் பொருட்களை அதிகம் பயன்படுத்தியதால், சென்னையின் மின் தேவை 25% அதிகரித்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் கோடை மழை காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நிலவிய வெப்ப அலை சிறிது குறைந்துள்ள நிலையில், 2024-ம் ஆண்டில் சென்னையில் அதிகபட்சமாக 40.6 டிகிரி வெப்பநிலையான பதிவாகி உள்ளது. வெப்பம் அதிகரித்து வருவதால் சென்னையில் மின் தேவை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisment

இந்த ஆண்டு கோடை வெயிலின் வெப்பம் கடுமையாக இருந்ததால், சென்னை மக்கள் ஏ.சி, மற்றும் குளிர்சாதனப் பொருட்களை அதிகம் பயன்படுத்தியதால், சென்னையின் மின் தேவை 25% அதிகரித்துள்ளது. இதனிடையே, சென்னையில் திங்கள்கிழமை 40.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது.

இருப்பினும், வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருவதால், மே 23-ம் தேதி முதல் மின் தேவை அதிகரித்துள்ளது. மே 17-ம் தேதி சென்னையில் உச்ச மின் தேவை 25% அதிகரித்து 4,400 மெகாவாட்டாக இருந்தது.

கோடை மழை காரணமாக ஏப்ரல் மற்றும் மே முதல் பாதியில் நிலவிய வெப்ப அலை சிறிது குறைந்த பிறகு, சென்னையில் 2024-ல் கடந்த திங்கள்கிழமை அதிகபட்சமாக 40.6 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.



மே 17-ம் தேதி சென்னையில் உச்ச மின் தேவை 25% அதிகரித்து 4,400 மெகாவாட்டாக இருந்தது. மே 19-ம் தேதி 73.42 மில்லியன் யூனிட்டில் இருந்து திங்களன்று 88.58 மில்லியன் யூனிட்களாக தினசரி மின் நுகர்வு 20% உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம், மே 6-ம் தேதி மின் தேவை 4,590 மெகாவாட்டாக உயர்ந்தது, மே 3-ம் தேதி அதிகபட்ச மின் நுகர்வு 97.43 மில்லியன் யூனிட்களாக இருந்தது.

சென்னையில் இந்த அளவுக்கு மின் தேவை அதிகரித்ததற்கு, வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களில் மக்கள் அதிக அளவில் ஏ.சி, மற்றும் குளிர்சாதனப் பொருட்களைப் பயன்படுத்தியதே காரணம் என்று மின்வாரிய ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும், ஏ.சி மற்றும் குளிர்சாதனங்களின் பயன்பாடு அதிக அளவில் மின் தேவையை அதிகரிக்கிறது. 

“அதே நேரத்தில், வெப்பநிலை குறையும்போது, ஏசி பயன்பாடு குறையும், மின் தேவை குறையும்” என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆனால், வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​வெப்பத்தை சமாளிக்க மக்கள் ஏ.சி-யை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால், சென்னையின் மின் தேவை அதிகரித்துள்ள போதிலும், மே முதல் வாரத்தில் 20,000 மெகாவாட்டைத் தாண்டிய நிலையில், மே 16 முதல் மாநிலத்தின் ஒட்டுமொத்த தேவை 16,500 மெகாவாட் முதல் 17,400 மெகாவாட் வரை சீராக உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மே 20-ம் தேதி 20,840 மெகாவாட் மின் தேவை பதிவானது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment