ஆரிசியர் காலிப்பணியிடங்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக, அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் பன்னாட்டு புத்தக கண்காட்சி தொடர்பான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
தமிழ்மொழியில் உள்ள நல்ல புத்தகங்களை வேறு மொழியில், மொழிபெயர்க்க ரூ. 3 கோடி நிதியுதவியை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிப்பாளர்களிடம் வழங்கினார். பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது : ” 2013ம் ஆண்டில் இருந்து ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தேவைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கால தாமதத்தை தவிர்க்கவே தற்காலிக ஆசிரியரை நியமனம் செய்திருக்கிறோம். மாணவர்களின் சேர்க்கை தகுந்தாற்போல்தான் தற்காலிக ஆசிரியை நியமித்துள்ளோம். 2,250 பி.ஜி ஆசிரியர்கள் நியமித்துள்ளோம் “ என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“