New Update
/indian-express-tamil/media/media_files/cASDg3mnv3SYpXRRZRfF.jpg)
பரந்தூரில் உள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தின் அடுத்த கட்ட மேம்பாட்டிற்கான டெண்டர்களை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) தலைவர் (கூடுதல் பொறுப்பு) எம். சுரேஷ் தெரிவித்தார். நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என்றும் கூறினார்.
சமீபத்தில், 4,791.29 ஏக்கரில் 20,000 கோடி செலவில் கட்டப்படும் பரந்தூர் சர்வதேச விமான நிலையத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை (EIA) மேற்கொள்ள மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. பரந்தூர் விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 2030ஆம் ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய எம். சுரேஷ், மாநில அரசு, ஏ.ஏ.ஐ இணைந்து விமான நிலையம் கட்டப்படும். இருப்பினும், தற்போது முழு திட்டமும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. விமான நிலையத்திற்காக விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
கிராம மக்களின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியிலும், திட்டம் வேகமாக நடந்து ருகிறது. போராட்டங்களின் மையமான ஏகனாபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு டிட்கோ சமீபத்தில் நிலம் கையகப்படுத்துதல் நோட்டீஸ் வழங்கியது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.