/tamil-ie/media/media_files/uploads/2023/07/shobs1.jpg)
தென்காசி தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவி நீக்கம்
தென்காசி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வந்த சிவபத்மநாபன் பதிவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வந்த சிவபத்மநாதன், அப்பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தென்காசி பகுதியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், திமுக பஞ்சயாத்து தலைவி தமிழ் செல்வி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தென்காசி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து சிவபத்மநாதனை நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் பொ.சிவபத்மநாதனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக, சுரண்டை நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜெயபாலன் தென்காசி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர் என்று அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.