தென்காசி அருகே 3 பேரை தாக்கிய கரடியை மயக்க ஊசி செலுத்தி படித்த வனத்துறையினர் அதனை காட்டில் விட்ட நிலையில், தற்போது அந்த கரடி உயிரிழந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஊருக்குள் புகுந்த கடடி அட்டகாசம் செய்து வந்துள்ளது. மேலும் சாலையில் சென்றவர்களை தாக்கிய நிலையில். 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கருத்தலிங்கபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வாகனத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கரடி அவரை தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அவரை கிராம மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த மேலும் இரண்பேரை கரடி தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கரடியின் நடமாட்டம் குறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் கரடியின் நடமாட்டத்தை கண்டறிந்து அதை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சியின் பலனாக கரடியை நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர் அதனை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டுள்ளனர்.
இதனிடையே மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதியில் விடப்பட்ட கரடி தற்போது உயிழிழந்துவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதே பரிசோதனைக்கு பின்னரே கரடி மரணத்திற்கான காரணத்தை சொல்ல முடியும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil