Coimbatore, Madurai, Trichy News: கிருஷ்ணகிரியில் யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயற்சி; 4 பேர் கைது

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ivory seize arrest

ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழாவையொட்டி சிவ வாத்தியங்கள் முழங்க கொடிமரத்தில் விழா கொடி ஏற்றப்பட்டது. ஜூலை 1ஆம் தேதி நடராஜர் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. ஜூலை 2ஆம் தேதி ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெற உள்ளது.

  • Jun 23, 2025 21:59 IST

    கிருஷ்ணகிரி அருகே கத்தியுடன் சுற்றிய நபர் த.வெ.க-வைச் சேர்ந்தவர் அல்ல - த.வெ.க மாவட்ட செயலாளர் விளக்கம்

    கிருஷ்ணகிரி அருகே கத்தியுடன் சுற்றியதாகக் கூறப்பட்ட நபர், த.வெ.க. துண்டு அணிந்திருந்தாலும், அவர் தங்களது கட்சியைச் சேர்ந்தவர் அல்ல என்றும், அவர் ஒரு மாற்றுக் கட்சிக்காரர் என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட த.வெ.க. செயலாளர் சுரேஷ் விளக்கமளித்துள்ளார். அந்த நபர் கடந்த 15 நாட்களாக த.வெ.க. துண்டு அணிந்து, த.வெ.க. பெயரை தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கத்தியுடன் சுற்றியவருக்கும் த.வெ.க. கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சுரேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.



  • Jun 23, 2025 21:47 IST

    கிருஷ்ணகிரியில் யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயற்சி; 4 பேர் கைது

    கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் யானைத் தந்தங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 4 பேரை வனத்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி பகுதியில் யானைத் தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, குந்தாரப்பள்ளி பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற நான்கு பேரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 400 கிராம் எடையுள்ள யானைத் தந்தத் துண்டுகளையும், விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.



  • Advertisment
  • Jun 23, 2025 19:55 IST

    128 செல்போன்கள் மீட்பு: நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை

    நீலகிரி மாவட்டத்தில் காணாமல் போன ரூ. 20 லட்சம் மதிப்பிலான 128 செல்போன்களை மீட்டு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக செல்போன்கள் திருடு போனதாகவும், காணாமல் போனதாகவும் பல புகார்கள் காவல் நிலையங்களுக்கு வந்தன. இந்த புகார்களின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    விசாரணையின் முடிவில், தொழில்நுட்ப உதவியுடன் காணாமல் போன செல்போன்கள் கண்காணிக்கப்பட்டு, இதுவரை ரூ. 20 லட்சம் மதிப்பிலான 128 செல்போன்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட செல்போன்கள் இன்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.



  • Jun 23, 2025 18:58 IST

    ராமேஸ்வரம் வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக புதிய விமான நிலையம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தின் தொடக்கமாக ராமநாதபுரம் உள்பட 5 இடங்களில் தலா 300 ஏக்கர் முதல் 700 ஏக்கர் வரையிலான இடம் தேர்வு செய்து அரசுக்கு  அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது



  • Advertisment
    Advertisements
  • Jun 23, 2025 17:40 IST

    ஊட்டியில் சூறாவளியுடன் கனமழை

    ஊட்டியில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. கடும் குளிரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.  இன்று காலை மழை குறைந்த போதிலும், பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், கடும் குளிர் நிலவுகிறது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் காய்கறி, தேயிலை தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.



  • Jun 23, 2025 17:27 IST

    செல்போன் டவர் உச்சியில் 2 பேர் ஏறியுள்ளதால் பரபரப்பு

    தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் செல்போன் டவர் உச்சியில் 2 பேர் ஏறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர்களை கீழே இறக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறை, காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.



  • Jun 23, 2025 16:47 IST

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 12,181 கனஅடியாக சரிவு

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 18,068 கனஅடியில் இருந்து 12,181 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 18,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.87 அடியாகவும் நீர் இருப்பு 84.03 டிஎம்சியாகவும் உள்ளது.



  • Jun 23, 2025 16:46 IST

    12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

    தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர் , திருநெல்வேலி, தென்காசி, தேனி , விழுப்புரம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 23, 2025 16:44 IST

    கொடைக்கானலில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்

    கொடைக்கானலில் இன்று படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.



  • Jun 23, 2025 15:41 IST

    வால்பாறைக்கு இடைத்தேர்தல்?

    தமிழக சட்டசபை 2026, மே 9ஆம் தேதி முடிவடையும் நிலையில் தற்போதைக்கு வால்பாறைக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. கடந்த 2020 ஜூன் 10 இல் சேப்பாக்கம் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இறந்த போதும் இடைத்தேர்தல் நடத்தவில்லை. எனவே வால்பாறைக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



  • Jun 23, 2025 15:06 IST

    தண்ணீர் லாரி அடியில் சிக்கி காவலாளி மரணம்

    கோவை: அவிநாசி சாலையில் சாலையோரம் கவிழ்ந்த தண்ணீர் லாரி அடியில் சிக்கி தனியார் நிறுவனத்தின் காவலாளி உயிரிழந்த சோகம்.

    உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை.



  • Jun 23, 2025 13:00 IST

    ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு 

    ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா - 24வது பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நுற்றாண்டு விழா குறித்து  பேரூர் ஆதீன மடத்தில் பாரம்பரிய சிவ வேள்வி பூஜையில், எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் நல்லறம் அறக்கட்டளை நிறுவனர் அன்பரசு ஆகியோர் பங்கேற்றுள்ளார். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் கவுரவிக்கப்பட்ட நிலையில், பேரூர் ராமசாமி அடிகளார் காலில் விழுந்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வணங்கினார்.



  • Jun 23, 2025 12:42 IST

    சாலை விபத்து - தந்தை கண் முன்னே பலியான பச்சிளங்குழந்தை

    கள்ளக்குறிச்சி மாரனோடையைச் சேர்ந்த உதயகுமார், தன் இரண்டரை வயது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து. தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்தை முந்தி செல்ல முயன்றபோது நேர்ந்த சோகம். காவல்துறையினர் கல்லூரி பேருந்தின் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை. எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி பேருந்தின் டயரில் சிக்கி பலியான குழந்தை



  • Jun 23, 2025 11:48 IST

    மோகன் பகவத்துக்கு வேல் பரிசளித்த எஸ்.பி. வேலுமணியின் சகோதரர் அன்பரசன்

    கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்து கொண்ட மோகன் பகவத்துக்கு, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சகோதரர் அன்பரசன் சார்பாக வேல் பரிசளிக்கப்பட்டது.



  • Jun 23, 2025 11:23 IST

    சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஜாமின் மனு தள்ளுபடி

    தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை, மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது. இந்த விசாரணையின் போது, "வழக்கு முடியும் நிலையில் உள்ளது. மனுதாரர், தானே சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து வருகிறார். ஆகவே, மனுதாரருக்கு ஜாமின் வழங்கக் கூடாது" என்று சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



  • Jun 23, 2025 10:43 IST

    கோவை ஆர்.எஸ்.எஸ் விழாவில் எஸ்.பி. வேலுமணி பங்கேற்பு

    கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் விழாவில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றார். பேரூர் சாந்தலிங்க அடிகளார் கல்லூரி மைதானத்தில் இந்த விழா நடைபெற்றது. இதில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.



  • Jun 23, 2025 10:10 IST

    அண்ணாவின் பெயரை பயன்படுத்தும் தகுதி அ.தி.மு.கவிற்கு இல்லை - அமைச்சர் ரகுபதி

    அண்ணாவின் பெயரை பயன்படுத்தும் தகுதி அ.தி.மு.க-விற்கு இல்லை என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "அ.தி.மு.க-விற்கு, அண்ணாவின் பெயரை பயன்படுத்தும் தகுதியே இல்லாமல் போய்விட்டது. திராவிடத்தை எதிர்த்து நடந்த முருகன் மாநாட்டில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது" என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.



  • Jun 23, 2025 09:41 IST

    தென்காசி காப்பகத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

    தென்காசி சுந்தரபாண்டியபுரத்தில் தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்தனர். இதனை அடுத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



  • Jun 23, 2025 09:38 IST

    காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Jun 23, 2025 09:37 IST

    ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம்

    சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழாவையொட்டி சிவ வாத்தியங்கள் முழங்க கொடிமரத்தில் விழா கொடி ஏற்றப்பட்டது. ஜூலை 1ஆம் தேதி நடராஜர் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. ஜூலை 2ஆம் தேதி ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெற உள்ளது.



news updates Tamilnadu Live News Udpate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: