/indian-express-tamil/media/media_files/2024/12/16/Pmx8YZpdPzgvL0K7xzps.jpg)
பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து வயலுக்குள் விழுந்தது. பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வாகனம் ஒன்று வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 10க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர்.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், உடனடியாக குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே வாகனத்தில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.