சிறுக சிறுக சேமித்த பணத்தை கரையான் அரித்த சோகம்: கூலித்தொழிலாளி கண்ணீர் மல்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கூலித் தொழிலாளி ஒருவர் சிறுக சிறுக சேமித்த பணத்தை கரையான் அரித்துள்ளது. சேமிப்பு பணம் முழுதும் வீணாகிவிட்டதால், தமிழக அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கூலித் தொழிலாளி ஒருவர் சிறுக சிறுக சேமித்த பணத்தை கரையான் அரித்துள்ளது. சேமிப்பு பணம் முழுதும் வீணாகிவிட்டதால், தமிழக அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sivagangai

கரையான் அரித்த ஒரு லட்ச ரூபாய்: கூலித்தொழிலாளி கண்ணீர்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கிளாதரி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முத்து கருப்பி (30), கூலி தொழிலாளி. ஏழ்மையில் வாடும் அவர் குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைக்க திட்டமிட்ட அவர், இதற்காக தகர உண்டியல் ஒன்றை தயார் செய்துள்ளார். சிறுக சிறுக ஒரு வருடத்திற்கு மேலாக சேமித்த பணத்தை கரையான் அரித்துள்ளது. தினமும் சம்பாதித்த தொகையை ரூ.500 மதிப்பிலான நோட்டுகளாக மாற்றி, தகர உண்டியலில் சேமித்து வந்த அவர், அதை வீட்டுக்குள் பள்ளம் தோண்டி மண்ணில் புதைத்து வைத்திருந்தார். அந்த வகையில், அவர் ரூ.1 லட்சம் வரை அவர், தகர உண்டியலில் சேர்த்து வைத்து உள்ளார்.

Advertisment

மகளுக்கான காதணி விழாவை முன்னிட்டு, இன்று காலை பணத்தை எடுக்க நினைத்தபோது, அந்தப் பணம் முழுமையாக கரையான் அரிக்கப்பட்டிருந்தது. இது கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சேமித்த தொகையாகும். ஏழ்மையில் வாடும் முத்து கருப்பி, தன்னால் மேலும் என்ன செய்யலாம் என தெரியாமல் கண்ணீருடன் தனது நிலையை பகிர்ந்துள்ளார். சேமிப்பு பணம் முழுதும் வீணாகிவிட்டதால், அடுத்து என்ன செய்வது என தெரியாமல் கண்ணீர் வடிக்கும் முத்து கருப்பி, தனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Sivagangai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: