கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா. பாண்டியன், திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தா. பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி:
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டியன் நேற்று ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல் காரணமாக அவரை உடன் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். முன்னதாகவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தா. பாண்டியனுக்கு தற்போது மூச்சுத் திணறலால் உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ளது.
முன்னதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்திக்கு:
நேற்று அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் அவர் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.