கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை மணிமண்டபம் பணி மீண்டும் எப்பொழுது தொடங்கப்படும் என இன்று (மார்ச் 27) சட்டமன்ற கூட்டத் தொடரில் எம்.எல்.ஏ என். தளவாய்சுந்தரம் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த செய்திதுறை அமைச்சர் சுவாமி நாதன், “மாவட்ட ஆட்சியர் தலைமையில் விரைவில் பணிகள் தொடங்கும்” என்றார்.
மேலும், இப்பிரச்னை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளது” என்றார்.
தொடர்ந்து, சட்டமன்ற கூட்டத்தொடரில் என். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியதன் அடிப்படையில் விரைவில் இப்பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“