கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் வந்த ஓ.பி.எஸ் கட்சி கூட்டத்தில் பேசினார். ” நான் டிடிவி தினகரன் வீட்டிற்கு செல்லும்போது முந்திரி பருப்பை சாப்பிட்டுக்கொண்டே சகுதி வேலையை பார்பார் தளவாய் சுந்தரம்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலாளித்த தளவாய் சுந்தரம் ” டிடிவி தினகரன் கட்சி ஆரம்பித்தபோது எங்கள் முன் கைகட்டி நிட்பார் ஓ.பி.எஸ் . சகுனி என்றால் யார் ? இவர்தான் சகுனி. இவருடைய சொத்து மதிப்பு என்ன? உங்கள் மீது ஏன் வழக்குகள் பாய்கிறது. அதிமுகவால் சம்பாதித்து அதிமுகவிற்கே சகுனி வேலை பார்த்தவர்” என்று கூறினார்.
மேலும் அவர் முந்திரி பருப்பு என்று கூறுவதற்கு பதில் மந்திரி பருப்பு என்று கூறியதால் சுற்றியிருந்தவர்கள் சிரித்தனர். இதைத்தொடர்ந்து பேசிய அவர் “முதிரி பருப்பு நான் சாப்பிட்டேன் என்று கூறுவதில் மகிழ்ச்சி. ஆனால் அவர் யாருடன் முந்திரி சாப்பிட்டார். அவரை முதலமைச்சராக்கிய குடும்பத்திற்கு எதிராக அவர் செயல்பட்டார்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“