Advertisment

சீமான் ஜெயித்தால் மொட்டை அடிப்பேன்: மீண்டும் சவால்விட்ட வீரலட்சுமி

தமிழர் முன்னேற்றப் படை வீர லட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சவால் விட்டார். அப்போது இந்தச் சவாலில் சீமான் ஜெயித்துவிட்டால் தாம் மொட்டையடித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
veeralakshmi husband seeman boxing venue and place in video

தமிழர் முன்னேற்றப் படை வீர லட்சுமி, சீமானுக்கு மீண்டும் சவால்விட்டுள்ளார்.

தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பை நடத்திவரும் வீரலட்சுமி இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு புதிதாக சவால் ஒன்றை விடுத்தார்.

அதில், “சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ1 குற்றவாளியான ஜெயலலிதா, ஏ2 குற்றவாளியான சசிகலா ஆகியோரின் தொடர்பான குற்றங்களை புத்தகமாக வெளியிட சீமான் தயாரா?

அவர் புத்தகமாக வெளியிட்டால் நான் தலைமை செயலாக வாசலில் மொட்டையடித்துக் கொள்கிறேன். இல்லாவிட்டால் அவர் மீசையை எடுக்க தயாரா? என்றார்.

Advertisment

தொடர்ந்து, “பாஜக சொல்வதை சீமான் செய்கிறார். அவர் அதிமுகவின் பி டீம் ஆக செயல்படுகிறார் என்றும் அவர் பசுந்தோல் போர்த்திய குள்ளநரி எனவும் விமர்சித்தார்.

இதையடுத்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில், “உங்களுக்கு என்ன பிர்சனை? சீமானுக்கு ஆதரவாக நான் பேச வேண்டுமா? எனவும் கூறினார்.

முன்பு, சீமான் மீது குற்றச்சாட்டுகள் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு வீரலட்சுமி பக்க பலமாக நின்றார். இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி வீரலட்சுமி மீது குற்றச்சாட்டுகள் கூறி அவரிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment