Advertisment

தாமிரபரணியில் 1 லட்சம் கன அடி நீர்: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பல்வேறு அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றிக்கு 1 லட்சம் கன அடிநீர் வந்து கொண்டிருப்பதால் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

author-image
WebDesk
New Update
thamirabarani.jpg

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் மேலும் உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். 

Advertisment

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் சாலைகள், வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. கனமழையால் அங்குள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.  இந்நிலையில், பல்வேறு அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றுக்கு  1 லட்சம் கன அடிநீர் வந்து கொண்டிருப்பதால் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.  

தாமிரபரணி ஆற்றை சுற்றி உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

காரையார், சேர்வலாறு அணைகளுக்கு 31,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், தாமிரபரணி ஆற்றில் 32,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

 நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள மணிமுத்தாறு அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.  நெல்லை தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் கடந்து வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

மக்களுக்கு உதவி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment