Advertisment

ஆளுநர் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: தேசிய கீதத்திற்கு முன்பாக பாடியதாக விளக்கம்

மதுரையில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற விழாவில் முதலில் தேசிய கீதம் பாடுவதற்கு பதிலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால் சலசலப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN governor RN Ravi accusations universities having only dravidian history not freedom fighters Tamil News

மதுரையில் செயல்பட்டு வரும் தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியா சார்பில், இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். 

Advertisment

 

Governor event

 

Advertisment
Advertisement

இந்த நிகழ்ச்சி தொடங்கும் போது, முதலில் தேசிய கீதம், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். ஆனால் இதை சரியாக கவனிக்காத மாணவிகள், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடத் தொடங்கினர்.

இதைத் தொடர்ந்து, விழா ஏற்பாட்டாளர்கள் தேசிய கீதம் பாடுமாறு அறிவுறுத்தினர். அப்போது, சுதாரித்துக் கொண்ட மாணவிகள் தேசிய கீதத்தை பாடி, பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். இதனால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. எனினும், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகிய இரண்டும் முறையாகவும், முழுவதுமாகவும் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Governor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment