Advertisment

ஓ.பி.எஸ் சொந்த தொகுதிக்கு வராமல் கேரளாவில் ஆயில் மசாஜ்: தங்க தமிழ்ச் செல்வன் புகார்

"15 ஆண்டுகளாக போடி சட்டமன்ற தொகுதியில் ஜெயித்த ஓ.பன்னீர்செல்வம் அத்தொகுதி மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. மாறாக கேரளாவில் ஆயில் மசாஜ் செய்து வருகிறார்", என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ops - thanga tamil selvan

100 கோடி ரூபாய் செயல்திட்டத்தில் போடிநாயக்கனூரில் உருவாக்கப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு கொட்டகுடி கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தொடங்கி வைக்க உள்ளனர்.

Advertisment

இது தொடர்பாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் கூறியதாவது, வரும் 28 ஆம் தேதி முல்லைப் பெரியாறு கொட்டகுடி கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அவருக்கு ( ஓ. பன்னீர்செல்வத்திற்கு) அழைப்பு விடுக்கப்படும். வருவதும், வராமல் இருப்பதும் அவருடைய தனி விருப்பம் என்றும் தெரிவித்தார்.

போடி சட்டமன்ற தொகுதியில் ஜெயித்ததற்கு பிறகு இதுவரை அவர் எத்தனை முறை போடிநாயக்கனூருக்கு வந்துள்ளார்?

தோற்றுப்போன பின்பும் அடிக்கடி போடிநாயக்கனூருக்கு வருகை தந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறேன்," என்று தங்க தமிழ் செல்வன் கூறினார்.

மேலும், "15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் போடிக்கு எந்த ஒரு திட்டங்களும் கொண்டு வரவில்லை, எம்எல்ஏவாக ஆன ஓ.பன்னீர்செல்வம் கேரளாவில் ஆயில் மசாஜ் செய்து வருவதாக தகவல் வந்துள்ளது, " என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Ops Thanga Tamil Selvan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment