"தப்புக் கணக்கு போடும் அ.தி.மு.க": இ.பி.எஸ் - அமித்ஷா சந்திப்பை மறைமுகமாக விமர்சித்த தங்கம் தென்னரசு

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இடையே நடைபெற்ற சந்திப்பை விமர்சிக்கும் விதமாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இடையே நடைபெற்ற சந்திப்பை விமர்சிக்கும் விதமாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TT about ADMK

அ.தி.மு.க தற்போது தப்பு கணக்கு போடுகிறது என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா இடையே நிகழ்ந்த சந்திப்பு குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

Advertisment

இன்றைய தினம் (மார்ச் 26) ஊரக வளர்ச்சித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அந்த விவாதத்தின் போது, "கணக்கு கேட்டு தொடங்கிய கட்சி தான் அ.தி.மு.க. 2026-ஆம் ஆண்டு முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து புதிய கணக்கை எடப்பாடி பழனிசாமி தொடங்குவார்" என்று அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், தற்போது அ.தி.மு.க தப்பு கணக்கு போடுகிறது" என்று விமர்சித்தார். குறிப்பாக, நேற்று (மார்ச் 25) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் எதிர்க் கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே டெல்லியில் நிகழ்ந்த சந்திப்பை விமர்சிக்கும் வகையில் தங்கம் தென்னரசு கூறினார்.

இதைக் கேட்ட அ.தி.மு.க உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி, "எடப்பாடி பழனிசாமியின் கணக்கு சரியாகத்தான் இருக்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக தான் வரும்" என்று கூறினார். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷாவின் சந்திப்பு அரசியல் களத்தில் பேசுபொருளானதுடன், சட்டப்பேரவையிலும் விவாத பொருளானது.

Advertisment
Advertisements

நேற்று (மார்ச் 25) திடீரென டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு புதிதாக கட்டப்பட்ட அ.தி.மு.க அலுவலகத்தை பார்வையிடுவதற்காக வந்ததாக குறிப்பிட்டார். ஆனால், கட்சி அலுவலகத்தை பார்வையிட்ட அவர், நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம் என்று பல தரப்பினரும் கூறிய நிலையில், மக்கள் பிரச்சனை குறித்து மட்டுமே அமித்ஷாவுடன் பேசியதாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

Admk Thangam Thennarasu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: