Advertisment

போதையில் டூவீலர் ஓட்டிய இளைஞர்: நூதன முறையில் தெளிய வைத்த தஞ்சை போலீஸ்

போதையில் டூவீலர் ஓட்டிய இளைஞர்; 'தெளிய' வைத்து அனுப்பிய தஞ்சை போலீசார்!

author-image
WebDesk
New Update
போதையில் டூவீலர் ஓட்டிய இளைஞர்: நூதன முறையில் தெளிய வைத்த தஞ்சை போலீஸ்

Thanjai police given Novel treatment to drunken youth: குடிபோதையில் இரண்டு சக்கர வாகனம் ஓட்டிவந்த இளைஞரை குழாயில் 'குளிக்க வைத்து' போதையை தெளிய வைத்து அனுப்பினர் தஞ்சை போக்குவரத்து போலீசார். 

Advertisment

publive-image

தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலை அருகில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் இரவு போலீசார் வாகன தணிக்கை செய்து வந்தனர். 

இதையும் படியுங்கள்: கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செயல்படுவது எப்போது? அமைச்சர் முத்துசாமி பேட்டி

அப்போது தஞ்சையைச் சேர்ந்த சதீஷ் என்ற 22 வயது இளைஞர் அவ்வழியே குடிபோதையில் வாகனத்தை நிலைதடுமாறி ஓட்டி வந்துள்ளார். 

publive-image

அவரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்த போலீசார் அவரை போக்குவரத்து காவல் பிரிவிற்கு அழைத்துச் சென்று அவரை கண்டித்ததுடன் அவரை குழாய் தண்ணீரில் 'குளிப்பாட்டி' அவரது போதையை தெளிய வைத்தனர்.

இதுபற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார். மேலும் அவரது பெற்றோரின் வேண்டுகோளின்படி தஞ்சாவூரில் செயல்படும் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் அந்த இளைஞரை சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எஸ். இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Thanjavur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment