22ஆவது இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர் மா.கருணாநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு, 22ஆவது சட்ட ஆணையத்தை அமைத்து உள்ளது. இதன் தலைவராக கர்நாடக மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி நியனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமைப்பில் கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.சங்கரன், பேராசிரியர்கள் ஆனந்த் பாலிவால், டி.பி.வர்மா, ரக ஆர்யா, மதுரை உயர் நீதிமன்ற கிளையின் மூத்த வழக்கறிஞர் மா.கருணாநிதி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மா. கருணாநிதி, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தந்தை பெயர் மாரியப்பன். 1995ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த இவர், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆக பணியை தொடங்கினார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணிபுரிந்தார். மேலும், மத்திய அரசு வழக்குகளில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil