Advertisment

47-வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 3-ம் தேதி தொடக்கம் - பபாஸி அறிவிப்பு

Chennai Book Fair: 47-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அடுத்த மாதம் (ஜனவரி ) 3 ஆம் முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என பபாஸி அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
chennai book fair

சென்னை புத்தகக் காட்சி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Chennai Book Fair: 47-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அடுத்த மாதம் (ஜனவரி ) 3 ஆம் முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Advertisment

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், 47-வது சென்னை புத்தகக் காட்சியை ஜனவரி 3-ம் தேதி மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாஸி அறிவித்துள்ளது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், 47-வது சென்னை புத்தகk காட்சி ஜனவரி 3-ம் தேதி முதல் ஜனவரி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புத்தக காட்சி வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி மொத்தம் 19 நாட்கள் நடைபெறுகிறது.

சென்னை புத்தக கண்காட்சி தொடக்க விழாவில், தொடக்க விழாவில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொள்கிறார். இந்த புத்தகக் காட்சியில், ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரை இடம்பெறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Book Fair
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment