/indian-express-tamil/media/media_files/Xzfi11t0PW2ZW9PcQVGb.jpg)
கோவை நகர் புதிய மாவட்ட தலைவர் ரமேஷ்குமார்
கோவை மாவட்ட பா.ஜ.க தலைவராக பதவி வகித்து வந்த பாலாஜி உத்தம ராமசாமி தன்னை பதவியில் இருந்து விடுவிக்குமாறு பா.ஜ.க மாநில தலைமைக்கு கடிதம் அளித்துள்ளார். அவரது கடிதத்தை ஏற்றுக் கொண்ட பா.ஜ.க மாநில தலைமை, கோவை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட தலைவரை நியமித்துள்ளது.
இது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோயமுத்தூர் நகர் மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த பாலாஜி உத்தம ராமசாமி மாவட்டத்தினை சிறப்பான முறையில் வழிநடத்தி களப்பணியாற்றி வந்தார்.
தற்பொழுது சொந்த காரணங்களுக்காக பா.ஜ.க-வின் மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளார்.
அவருடைய கடிதத்தினை ஏற்றுக் கொண்டு இன்று முதல் மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார்.
கோயமுத்தூர் நகர் மாவட்ட பொது செயலாளர் ஆக பணியாற்றி வந்த ரமேஷ்குமார் புதிய கோவை மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.