Advertisment

2ஜி வழக்கு: ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிப்பு சட்ட விதிமீறல்: சி.பி.ஐ வாதம்

2ஜி ஊழல் முறைகேடு வழக்கில் இருந்து ஆ. ராசா உள்ளிட்டோரை விடுவித்தது விதிமீறல் என சி.பி.ஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது.

author-image
WebDesk
New Update
The CBI claims that the acquittal of A Raja and others in the 2G case is a violation of the law

தி.மு.க. மக்களவை எம்.பி. ஆ. ராசா

2ஜி ஊழல் முறைகேடு வழக்கில் இருந்து எம்.பி. ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் 2017ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

Advertisment

இந்தத் தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுக்களின் விசாரணையின்போது, “சிபிஐ தரப்பில் ஆ. ராசா உள்ளிட்டோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது சட்ட விதிமீறல் என வாதாடப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் ஆ. ராசாவின் கைதுக்கு முன்னர் வழக்கு ஒரு மாதிரியாகவும் கைதுக்கு பின்னர் வழக்கு மற்றொரு விதமாகவும் பார்க்கப்பட்டது” என்று வாதாடப்பட்டது.

தொடர்ந்து, ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்த சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு பிழையானது என்றும் சிபிஐ வாதிட்டது.

இந்த நிலையில் வழக்கு மே 29ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றைய தினம்

2ஜி வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டில் சிபிஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk A Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment