New Update
/indian-express-tamil/media/media_files/Ae2sW4627HxWVQsbasyy.jpg)
பெரம்பலூரில் தந்தையை மகன் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீப் போல் பரவிவருகிறது.
/
தந்தை குழந்தை வேல்-ஐ மகன் சக்திவேல் தாக்கும் கொடூரமான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன. இந்த விவகாரம் குறித்து வி. களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெரம்பலூரில் தந்தையை மகன் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீப் போல் பரவிவருகிறது.
Perambalur | பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தை வேலு (65) என்பவருக்கு சங்கவி என்ற மகளும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர்.
இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சக்திவேல் திருமணமாகி அவர் தனது மாமனார் வீட்டில் தங்கி அவர்களது ரைஸ் மில்லை கவனித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குழந்தைவேலுக்கும் அவரது மகன் சக்தி வேலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தந்தை குழந்தை வேலுவை சக்தி வேல் தாக்கியுள்ளார். இதற்காக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
இந்த நிலையில், ஏப்.18ஆம் தேதி இரவு தூங்கச் சென்ற குழந்தை வேலு அறையை விட்டு திரும்பவில்லை. அவர் படுக்கை அறையிலேயே பிணமாக கிடந்துள்ளார்.
இந்த நிலையில் அவரின் உறவினர்கள் சக்தி வேல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமராவை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அப்போது தந்தை குழந்தைவேலை சக்தி வேல் கடுமையாக தாக்குவது தெரியவந்தது. இதையடுத்து, சக்தி வேல் மீது ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், தாக்கி ரத்தக் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து சக்தி வேல்-ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர். தந்தையை சக்தி வேல் தாக்கும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.