New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/12/a20.jpg)
மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கவில்லை என மத்திய அரசு பதிலளித்தாக தகவல் வெளியாகி உள்ளது.
மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கவில்லை என மத்திய அரசு பதிலளித்தாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை தவிர்க்க காவிரியின் குறுக்கே மேகேதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசு தயாராகிவருகிறது.
இந்த அணை கட்ட பணிகளை கர்நாடகா அரசு விரைவில் தொடங்கும் என அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறினார். இந்நிலையில், இந்த அணை கட்ட தமிழ்நாடு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பேசிய தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன், “தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி, பிப்ரவரி 1-ம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (சிடபிள்யூஎம்ஏ) கூட்டத்தின்போது, மேகதாதுவில் நீர்த்தேக்கம் கட்டுவது குறித்த பிரச்னையை கர்நாடக அரசு எழுப்பியது.
பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க கர்நாடகாவின் எல்லை மாவட்டமான ராமநகராவில் உள்ள கனகபுரா அருகே மேகேதாடு அணை முன்மொழியப்பட்டது. இருப்பினும், இந்த திட்டத்தால் கீழ்நிலை நீர் ஓட்டம் பாதிக்கப்படும், மாநிலத்தில் விவசாயம் சீர்குலைந்துவிடும் என்று தமிழகம் அஞ்சுகிறது.
பிப்ரவரி 1-ம் தேதி, இந்தப் பிரச்னை மீண்டும் எழுப்பப்பட்டது. இந்த முன்மொழிவை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். மேலும் இந்த பிரச்சினையை விவாதத்திற்கு கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
இதற்கிடையில் மேகதாதுவின் அணை கட்ட மத்திய அரசின் அனுமதி கர்நாடகாவுக்கு கிடைத்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இதுதொடர்பாக ஆர்.டி.ஐ மூலமாக கேள்வியெழுப்பப்பட்டது.
அதில், “காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எந்தவிதமான அனுமதியையும் தற்போது வரை வழங்கவில்லை” எனப் பதிலளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.