Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
தமிழ்நாடு நீதிமன்றங்கள்

அதிமுக வங்கி கணக்கு விபரங்களை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு

அ.தி.மு.க.வின் வங்கி கணக்கு வழக்குகளையும், ஆவணங்களையும் நவம்பர் 10 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written byWebDesk

அ.தி.மு.க.வின் வங்கி கணக்கு வழக்குகளையும், ஆவணங்களையும் நவம்பர் 10 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
02 Nov 2017 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 02 Nov 2017 20:05 IST

Follow Us

New Update
Election 2019: Chennai High Court

Election 2019: Chennai High Court

அ.தி.மு.க.வின் வங்கி கணக்கு வழக்குகளையும், ஆவணங்களையும் நவம்பர் 10 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அ.தி.மு.க (அம்மா, புரட்சி தலைவி அம்மா ) அணிகள் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பொதுச்செயலாளர் பதவி என்பதே கிடையாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு என்பது ஒரு சாரர் எடுத்த முடிவாகும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

மேலும் தேர்தல் ஆணையத்தில் கட்சி சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால்,

Advertisment
Advertisements

கட்சியின் மூன்று வங்கி கணக்குகளை கையாளவும் தடை விதிக்க வேண்டும் எனவும்,

கட்சியின் ஆவணங்களை கையாள தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கட்சியின் கணக்கு வழக்குகளையும், கட்சியின் ஆவணங்களையும் நவம்பர் 10ம் தேதிக்குள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கட்சியின் தலைமை கழக மேலாளர் மாலிங்கத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும் பொதுக்குழு தொடர்பாக வரும் 29ம் தேதி ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், திண்டுக்கல் சீனிவாசன், உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

V K Sasikala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!