Advertisment

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்; காங்கிரஸ் அறிவிப்பின் பின்னணி

ஜன.27ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Congress announce Election committee for Tamil Nadu | K S Alagiri

காங்கிரஸின் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் ஜன.27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி, ஜன.27ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “மகாத்மா காந்தியடிகள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கருத்து தெரிவித்தள்ளார்.

மகாத்மா காந்தியை அவமதிப்பது 140 கோடி இந்தியர்களை அவமதிப்பது ஆகும்” என்றார். மேலும், ஜன.27ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்றார்.

Advertisment

காந்தி குறித்து ஆளுநர்

ஜன.23ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி, “காந்தி தலைமையிலான ஒத்துழையாமை இயக்கத்தை விட, பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்து இந்திய வீரர்களால்தான் சுதந்திரம் கிடைத்தது.

நேதாஜி இல்லாவிட்டால் சுதந்திரம் கிடைத்திருக்காது” என்றார். தொடர்ந்து பேசிய ஆர்.என். ரவி, “நேதாஜியை நாம் இன்னமும் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை.

அவர் 70 ஆண்டுகளுக்கு முன்னரே ராணுவத்தில் பெண்களுக்கு இடம் அளித்தார். காந்தியின் 1942 ஒத்துழையாமை இயக்கம் பெரிதளவு செயல்படவில்லை. 1947ல் நமக்கு சுதந்திரம் கிடைக்க நேதாஜிதான் காரணம்” என்றார் என்பது நினைவு கூரத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu Congress Governor Rn Ravi K S Alagiri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment