Advertisment

நிர்மலா தேவி குற்றவாளி; தண்டனை விவரம் என்ன? நாளை அறிவிப்பு

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில், நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில், தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும்.

author-image
WebDesk
New Update
nirmala devi arrested

நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Professor Nirmala Devi | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான முறையில் வழிநடத்த முயன்ற வழக்கில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

Advertisment

நிர்மலாதேவியின் வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பெரும் புள்ளிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் உலா வர தொடங்கின.

இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நீண்ட காலமாக நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பு, நீண்ட நாள்கள் கழித்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அப்போது இது தொடர்பாக எந்த பேட்டியும் வழங்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று (ஏப்.29,2024) தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, நிர்மலா தேவி குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தண்டனை குறித்த விவரங்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்.30,2024) வழங்கப்பட உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Professor Nirmala Devi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment