/indian-express-tamil/media/media_files/iBdw7pfOWpH5gXzNGKt7.jpg)
ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல் வைத்தது ஏன் என டெல்லி நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது.
டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ சூடோஎபிடிரைன் என்கிற ரசாயனப் பொருள்கள் சிக்கியது.
இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இதற்கு மூளையாக முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்த அதிகாரிகள் மும்முரம் காட்டிய நிலையில் ஜாபர் சாதிக் தலைமறைவானார். இந்நிலையில் மார்ச் 9ஆம் தேதி அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பதுங்கியிருந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, சென்னை அடுத்த அயப்பாக்கம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கிடம் தொடந்து விசாரணை நடத்தப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு சென்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், ஜாபர் சாதிக்கை பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்கு டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது தேசிய போதைப் பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகள், “சீல் வைத்த வீட்டை பயன்படுத்த தடை இல்லை” எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, “ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல் வைத்தது ஏன் என கேள்வியெழுப்பி நீதிமன்றம், ஜாபர் சாதிக் தொடர்ந்த இந்த வழக்கை முடித்து வைத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.