Advertisment

வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பிதழ் கொடுத்த மாவட்ட ஆட்சியர்; என்ன காரணம்?

பொள்ளாச்சி சார் ஆட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கேத்தரின் சரண்யா தலைமையில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளோடு வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கினர்.

author-image
WebDesk
New Update
The district collector issued an invitation by placing a betel nut in Pollachi

பொள்ளாச்சியில் வெற்றிலை பாக்கு வைத்து மாவட்ட ஆட்சியர் அழைப்பிதழ் வழங்கினார்,

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pollachi | Lok Sabha Election | கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வீடு வீடாக சென்று மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வெற்றிலை பாக்குடன் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கி  தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisment

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில் கடந்த முறை நடந்த முடிந்த தேர்தல்களில் 50 சதவீதம் குறைவான வாக்குப்பதிவு நடந்த பகுதிகளில் வீடு வீடாகச் சென்று நடைபெற இருக்கிற மக்களவைத் தேர்தலில் அவசியம் வாக்களிக்க கோரி வெற்றிலை பாக்குடன் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கி வாக்காளர்களை அழைத்தனர்.

பொள்ளாச்சி சார் ஆட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கேத்தரின் சரண்யா தலைமையில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளோடு வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கினர்.

மேலும், தேர்தலில் வாக்களிக்க அழைத்தனர். இதற்கிடையில், தேர்தலில் வாக்களிப்பது அவசியம் குறித்து கேஸ் சிலிண்டர், பேருந்துநிலையம், ரயில் நிலையம் மற்றும் உணவு விடுதி ஆகிய பகுதிகளின் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

செய்தியாளர் பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pollachi Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment