/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-13T153154.475.jpg)
இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
Aiadmk | Edappadi K Palaniswami | முன்னாள் முதலமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளுமான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதலால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற போட்டி ஏற்பட்டது.
இந்த நிலையில 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஈரோடு இடைத்தேர்தல் வந்தது. இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.
ஓ. பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் கட்சியின் லெட்டர் பேடு, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த நீதிமன்றம் மூலமாக தடை வாங்கப்பட்டது.
இந்த நிலையில் 2024 மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பா.ஜ.க. கூட்டணியை முறித்துக் கொண்டு தனித்து இரட்டை இலை சின்னத்தில் போடடியிட்டது.
இதற்கிடையில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஏன் வழங்கப்பட்டது? அதற்கு என்ன காரணம் என பி. ஜெயசிம்மன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தேர்தல் ஆணையத்திடம் பதில் கோரியிருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், “ஆணைய விதிகள், சட்ட நடைமுறை அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இ்லை சின்னம் ஒதுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.