Advertisment

திவால் ஆனார் தினகரன்? ஐகோர்ட்டில் வக்கீல் பரபரப்பு தகவல்

டி.டி.வி தினகரனை திவாலானவராக அறிவிக்க அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TTV Dinakaran

TTV Dinakaran

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு ரூ.31 கோடி அபராதம் விதித்து மத்திய அமலாக்கத்துறை இயக்குனர் கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து டிடிவி தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த வழக்கும் 2017ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

Advertisment

பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும் அவர் இதுவரை ரூ.31 கோடி அபராதத் தொகையை செலுத்தவில்லை.

இவரிடம் பணத்தை வசூலிக்க அமலாக்கத் துறை இயக்குனரும் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே, எனது மனுவின் அடிப்படையில் டி.டி.வி. தினகரனிடம் பணத்தை வசூலிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வி. கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பி.குமார், “டிடிவி தினகரனை திவாலானவர் என்று அறிவிக்க அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

தொடர்ந்து, மனுவுக்கு விளக்கம் கிடைத்துவிட்டதால் வழக்கை முடித்துவைப்பதாக கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

High Court Enforcement Directorate Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment