சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தனது பெருபான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெருன்பான்மையை நிருப்பிக்க, ஆளுநர் உடனடியாக உத்தரவிடக்கோரி கோரி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி 122 சட்ட மன்ற உறுப்பினர்கள் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்க ஆதரவு அளித்தனர். அதன்படி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். இதனிடையே கடந்த சில ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினர் எடப்பாடி அணியுடன் இணைந்தனர். இது டிடிவி தினகரன் தலைமையிலான அணிக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில் 19 எம்.எல்.ஏக்கள் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்து கடந்த 22ம் தேதி முதல்வர் பழனிச்சாமிக்கு கொடுத்த ஆதரவை விலக்கி கொண்டனர். இதனையடுத்து ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை போல் சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் பெருன்பான்மை நிருபிக்ககோரி தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அளித்தார். 19 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை விலக்கி கொண்டதால் இந்த அரசு தனது பெரும்பான்மையை இழந்து விட்டது. எனவே உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடவில்லை எனில் குதிரை பேரம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
இதே போன்ற சூழ்நிலைகளில் உச்சநீதிமன்றம் பிறபித்த உத்தரவின் அடிப்படையில் நம்பிக்கை வாக்கெடுப்பு உடனடியாக சட்டமன்றத்தில் நடத்த முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் குதிரை பேரம் நடத்த வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.