காவல் ஆய்வாளராக பணியாற்றிய ரஞ்சித் என்பவர் 2019ஆம் ஆண்டு தனக்கு 2 மாதங்கள் ஊதியம் தரப்படவில்லை. அந்த ஊதியம் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள ஊதியத்தை எனக்கு தர உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
Advertisment
வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிஜிபி சைலேந்திர பாபு கடமை தவறியுள்ளார் என அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து, “நாட்டில் அதிகாரிகளின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதற்கு இந்த வழக்கு ஓர் உதாரணம். கடமை தவறிய டிஜிபியின் செயல் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.
அவர், சம்பள பாக்கி கோரிய காவல் ஆய்வாளரின் விண்ணப்பத்தினை பரிசீலிக்காமல் தவறியுள்ளார். இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, டிஜிபி ஒரு வாரத்தில் மனுதாரரின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“