/tamil-ie/media/media_files/uploads/2023/08/Madurai-High-Court.jpg)
மணல் கடத்தல் வழக்கில் இருவர் தலா ரூ 5 ஆயிரம் நூலகத்துக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஆறு, குளங்களில் இருந்து சட்ட விரோத மணல் கடத்தல் விற்பனை மற்றும் மதுபான விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தஞ்சாவூரை சேர்ந்த முருகேசன் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் நீதிமன்ற பிணை கோரி இரு வேறு மனுக்களாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், கைதான இருவரும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் கலைஞர் நூற்றாண்டு நூலக வங்கி கணக்கில் செலுத்த நஉத்தரவிட்டார்.
தென்தமிழகத்தில் மணல் கடத்தல் அதிகரித்து காணப்டுகிறது. குறிப்பாக மணல் மற்றும் ஜல்லி கற்கள் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக புகார்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.