Advertisment

தமிழக காவல்துறை யாருடைய ஏஜென்ட்? ஐகோர்ட் கேள்வி

மாரத்தான் ஓடுவதற்கும் நடப்பதற்கும் அனுமதி வழங்கும் காவல்துறை மதுவுக்கு எதிராக விழிப்புணர்வ செய்ய அனுமதி மறுப்பது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுபபி உள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai high court important order to DGP, madras high court, court order to avoid Two Finger test in sexual assault case, இருவிரல் பரிசோதனை, சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு, Two Finger test, Chennai high court order to avoid in sexual assault case

ராணிப்பேட்டையில் பாமக பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

madras-high-court | பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை குறித்து சைக்கிள் பேரணி பரப்புரை நடத்த ராணிப்பேட்டை போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

ஆகவே, இந்தப் பேரணியை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

Advertisment

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், “ராணிப்பேட்டையில் கடந்த மாதம் நடந்த ஊர்வலமங்கள், பொதுக்கூட்டங்கள் வழங்கப்பட்ட அனுமதி குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை நவ.17ஆம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டார்.

மேலும், “மாரத்தான் ஓடுவதற்கும் நடப்பதற்கும் அனுமதி வழங்கும் காவல்துறை மதுவுக்கு எதிராக விழிப்புணர்வ செய்ய அனுமதி மறுப்பது ஏன்? எனவும் கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து, தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜென்டாக செயல்படுகின்றனர் எனவும் கேள்வியெழுப்பினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment