Advertisment

கோவையில் மோடி பேரணி; உயர் நீதிமன்றம் அனுமதி

கோவையில் பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மோடி வாகனப் பேரணி..

author-image
WebDesk
New Update
chennai High Court approve another petition against formula 4 car racing high court tamil news

கோவையில் பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோயம்புத்தூரில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. வரும் திங்கள்கிழமை (மார்ச் 18, 2024) நடைபெற இருந்த பிரதமரின் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்க கோயம்புத்தூர் நகர காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Advertisment

மார்ச் 18 ம் தேதி கவுண்டமாபாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் ரோடு வழியாக ஆர்.எஸ்.புரம் வரை ரோடு ஷோ நடக்க இருந்தது.

இது 3.5 கிமீ + ரோடு ஷோவாக இருக்கும், இதன் மூலம் பிரதமர் இறுதி இடத்தில் பொதுமக்களிடம் சுருக்கமாக உரையாற்றுவார்.

கோவையில் பிரதமர் பங்கேற்க இருந்த பா.ஜ.க.வின் ரோடு ஷோவுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்து  உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரணிக்கு அனுமதி கோரி பா.ஜ.க தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இன்று மாலை அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.

செய்தியாளர் பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment