Advertisment

பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்ட்: என்ன காரணம்?

ஐஏஎஸ் அதிகாரிகள் ஸ்வர்ணா, மைதிலி ராஜேந்திரன் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த வழக்கு அக்.4ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai high court important order to DGP, madras high court, court order to avoid Two Finger test in sexual assault case, இருவிரல் பரிசோதனை, சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு, Two Finger test, Chennai high court order to avoid in sexual assault case

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

Madras High court : தலைமை செயலக நேரடி உதவிப் பிரிவு அதிகாரிகளுக்கு கூடுதல் இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (செப்.22) நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

Advertisment

அப்போது நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லையெனில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஸ்வர்ணா, மைதிலி ராஜேந்திரன் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரிகள் ஸ்வர்ணா, மைதிலி ராஜேந்திரன் ஆகிய இருவரும் எதிராக பிணையில் வெளிவரக் கூடிய வகையில் பிடிவாரண் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு அக்.4ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் ஸ்வர்ணா, மைதிலி ராஜேந்திரன் ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment