Advertisment

தென்மாவட்ட மக்களுக்கு குட்நியூஸ்; மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கம்?

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதிப்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

author-image
WebDesk
New Update
saa

சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதிப்பது குறித்து விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

kilambakkam | chennai-high-court | கிளாம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பேருந்து முனையத்திலிருந்துதான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

இதற்கு எதிராக தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

Advertisment

அப்போது சென்னை உயர் நீதிமன்றம், “தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதிப்பது குறித்து தமிழ்நாடு போக்குவரத்துதுறை ஆணையர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதியதாக பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இஙகிருந்து இயக்கப்பட்டு

வருகின்றன.

இந்தப் பேருந்து நிலையத்தில்  முதல் மாதாந்திர பயணச் சீட்டு விற்பனை மையம் தொடக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai High Court Kilambakkam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment