/indian-express-tamil/media/media_files/TQjpclqj4WqgLowPnmpz.jpg)
கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் வேறு எல்லை நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Chennai High Court |சென்னை காட்டாங்குளத்தூர் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் தாக்கி கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் 5 பேர் ஈரோடு சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இவர்கள் காஞ்சிபுரம் மற்றும் திருப்பூரை சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான் சரணடைய அடைய வேண்டும்; வேறு நீதிமன்றத்தில் சரணடைவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட எல்லைக்குள்பட்ட நீதிமன்றத்துக்கு பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது” என உத்தரவிட்டார்.
மேலும், “ மாஜிஸ்திரேட் முன்பு தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே அவரை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது” என்றார்.
தொடர்ந்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், “ஒருவர் சரண் அடையும் நிலையில், மாஜிஸ்திரேட் தனது எல்லைக்கு உள்பட்ட காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட நபரை காவலில் எடுக்க உத்தரவிடலாம். இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும்” என சுட்டிக் காட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.