Advertisment

லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் டி.என்.பி.எஸ்.சி: உயர் நீதிமன்றம் அதிரடி

தமிழ்நாடு அரசு தேர்வாணைய தலைவர், உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டுவந்து பிறப்பிக்கப்பட்ட திருத்த விதிகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
TNPSC group 1 group 2 exams results, TNPSC results when will be released, TNPSC notification, group 1, group 1 result 2023, tnpsc group 1, tnpsc group 1 prelims result, tnpsc group 1 prelims result 2021, tnpsc group 1 prelims result 2022, tnpsc group 1 prelims result 2023, டிஎன்பிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் 2023, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் 2023, டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2 தேர்வு முடிவுகள், tnpsc group 1 prelims result date, tnpsc group 1 prelims result date 2022, tnpsc group 1 prelims result update, tnpsc group 1 result,tnpsc group 1 result 2023, tnpsc group 1 result 2023 cut off marks, tnpsc group 1 result 2023 link, tnpsc group 1 result date 2023, tnpsc group 4 result 2023

டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டுவர ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தை லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டுவந்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிமன்றம் தனது தீர்ப்பில், “ஊழல் தடுப்புச் பிரிவின்படி தேர்வு ஆணைய ஊழியர்கள், தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் அரசு ஊழியர்கள் ஆவார்கள்.

ஆகையால், இவர்களை ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுக்குள் கொண்டுவந்தது தன்னிச்சையானது எனக் கூற முடியாது. சம்பந்தப்பட்ட திருத்தம் செல்லும்” என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

Advertisment

Madras High Court order on government lawyers fee arrears

மேலும், டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டுவர ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

தொடர்ந்து இந்த விவகாரத்தில் உறுப்பினர்களின் உரிமைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தை கொண்டுவரும் வகையில் 2011ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்தத் திருத்தத்துக்கு எதிராக ஊழியர்கள் சென்ன்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று (ஜன.5,2024) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tnpsc Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment