Advertisment

தி.மு.க உடன் நெருடல் இல்லை; விரைவில் 3ம் கட்ட பேச்சு: மார்க்சிஸ்ட்

“திமுக உடன் எந்த நெருடலும் இல்லை; சீட் பகிர்வு தொடர்பான 3ம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்படும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.

author-image
WebDesk
New Update
dmk donates left parties, dmk donates rs 10 crores to marxist communist party, CPI-M Explanation On Dmk election fund, CPI-M Explanation about dmk donation

தி.மு.க. உடன் நெருடல் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Marxist Communist Party | Dmk | Lok Sabha Election | நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் சீட் பகிர்வு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான தொகுதி பங்கீடு குறித்த 2-ம் கட்ட பேச்சு வார்த்தை நிறைவு இன்று (பிப்.25) நிறைவு பெற்றது.

இதையடுத்து, சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை குழு தலைவர் சம்பத் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, “தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்றுவருகின்றன. இன்றைய பேச்சுவார்த்தையும் மிகவும் இணக்கமான முறையில் அமைந்தது.

இரு தரப்பும் மனம் திறந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். விரைவில் 3ம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும்” என்றார்.

தொடர்ந்து, “திமுக உடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த நெருடலும் இல்லை” என்றார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dmk Marxist Communist Party Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment