Advertisment

விரிசல் விட்ட தண்டவாளம்; பாதியில் நிறுத்தப்பட்ட திருச்செந்தூர் ரயில்: 800 பயணிகளின் உயிரை காத்த பைலட்!

ரயில் தண்டவாளத்தில் காணப்பட்ட விரிசல் காரணமாக திருச்செந்தூர் சென்ற ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
The Palakkad Tiruchendur train was halted midway due to a crack in the Track

ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல் ரயில்வே பாதையில் விரிசல் காணப்பட்டது. (படம்: நன்றி தந்தி தொலைக்காட்சி)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

train | dindugal | கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு விரைவு ரயில் ஒன்று 800க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றது. இந்த ரயில், திண்டுக்கல் அருகே காமாட்சிபுரம் பகுதியில் வந்தபோது இரண்டு இடங்களில் தண்டவாளங்களில் உடைப்பு இருப்பது தெரியவந்தது.

ரயில் தண்டவாளத்தில் சப்தம் அதிகரித்த நிலையில் சுதாரித்துக் கொண்ட லோகோ பைலட் ரயிலை சாமர்த்தியமாக நிறுத்திவிட்டார். பின்னர் இது குறித்து ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்தத் தகவலின் பேரில் விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தனர். அதன் பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது.

லோகோ பைலட்டின் சாமர்த்தியம் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரயில்வே பணியாளர்கள் ரயில்வே தண்டவாளங்களை முறையாக பார்வையிட வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Train Dindugal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment