/tamil-ie/media/media_files/uploads/2022/09/Coimbatore-1.jpg)
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
குப்பையை கொட்டினால் ஆயிரம் அபராதம் என்றும், அதனை போட்டோ எடுத்து போட்டு கொடுத்தால் ரூ.500 சன்மானம் வழங்கப்படும் என்று கோவை மாவட்டத்தின். காட்டம்பட்டி கிராம ஊராட்சி மன்ற தலைவரின் வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ளது காட்டம்பட்டி கிராம். மொத்தம் 9 வார்டுகள் உள்ள இந்த கிராமத்தில், வார்டுகளில் சேகரிக்கும் குப்பைகளை வீட்டிற்கே வந்து சென்று வாங்கிச்செல்ல தூய்மைப்பணியாளர்கள் உள்ளனர். அப்படியிருந்து பொதுமக்களில் பலர் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டிச்செல்கின்றனர்.
இதனை தடுக்க முயற்சி செய்து வரும் ஊராட்சி மன்றத்தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன் வித்தியாசமான முறையில் விளம்பர போர்டுகளை பொது இடங்களில் அதாவது குப்பை கொட்டப்படும் இடங்களில் வைத்துள்ளார்.
இதில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனறும், குப்பை கொட்டுபவர்களை வீடியோ படம் எடுத்துக்கொடுத்தால் அவர்களுக்கு ரூ.500 சன்மானம் வழங்கப்படும் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த நூதன முயற்சியால் அப்பகுதியில் மக்கள் யாரும் குப்பைகளை வெளியில் கொட்டப்படுவதில்லை.
முதற்கட்டமாக 4 வார்டுகளில் மேற்கொள்ளகப்பட்ட முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பொதுமக்கள் இன்னும் ஒத்துழைப்பு வழங்கினால் அனைத்து வார்டுகளிலும் தங்களது தூய்மைப்பணி தொடரும் என ஊராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.