New Update
/indian-express-tamil/media/media_files/fWKaWrlNYhFIB7aH8QgF.jpg)
கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க இயலாது என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
00:00
/ 00:00
ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் போதிய அவகாசம் வழங்க வேண்டும் என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க இயலாது என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்த நிலையம் கட்டப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
அரசு உத்தரவு
இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இந்த நிலையில் இன்று (ஜன.24,2024) வெளியான புதிய உத்தரவில், தென்மாவட்டம் செல்லக் கூடிய ஆம்னிப் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டிருந்தது.
தொடர்ந்து, ரெட் பஸ், அபி பஸ் உள்ளிட்ட பயணச் சீட்டு முன்பதிவு செயலிகளிலும் மாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் அவகாச கோரிக்கை
இந்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், “கிளாம்பாக்கம் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் தேவை” எனக் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து அவர், “பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க இயலாது” எனத் தெரிவித்தார்.
சேகர் பாபு பேட்டி
முன்னதாக இது குறித்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அளித்த பேட்டியில், “இன்று (ஜன.24, 2024) இரவு முதல் ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து செயல்படாது. கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.
ஆம்னி பஸ் உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் தமிழ்நாடு அரசு செயல்பட முடியாது. தமிழக அரசுக்கு ஒத்துழைத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும்” எனத் தெரிவித்தார்.
பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆம்னி பேருந்துகள் எங்கிருந்து இயக்கப்படும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.