/tamil-ie/media/media_files/uploads/2023/03/kilambakkam-bus-terminal.jpg)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு தள்ளிப்போக காரணங்கள் வெளியாகியுள்ளன.
சென்னை அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி மேடாக காணப்படுகிறது. அதேநேரத்தில், ஜிஎஸ்டி சாலையை ஒட்டிய நுழைவாயில் பகுதி தாழ்வாகவும் அமைந்துள்ளது.
இதனால் சாதாரண மழை பெய்தாலே, நுழைவாயில் பகுதியில் 2 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கும் நிலை உள்ளது. இதனால், மழைநீர் தேங்காமல், ஊரப்பாக்கம் ஏரிக்குத் திருப்பி விடும் வகையில் மழைநீர் வடிகால் அமைப்புகளை ஏற்படுத்த ரூ.17 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மழைநீர் வடிகால் பணிகள் முடிய குறைந்தது 3 மாதங்கள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது. இதனால் வரும் தீபாவளிக்காவது பேருந்து நிலையம் திறக்கப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும், முந்தைய ஆட்சியாளர்கள் தவறு செய்துவிட்டனர். இதனால் பேருந்து நிலையத்துக்கான கட்டுமானச் செலவு 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனால், பேருந்து நிலையம் திறப்பு விழா செப்டம்பர் வரை தள்ளிப்போகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த கால ஆட்சியாளர்கள் மீது இதே குற்றச்சாட்டை அமைச்சர் சேகர் பாபுவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.