/indian-express-tamil/media/media_files/JlLapm4vJd7zupOv1fLo.jpg)
விழுப்புரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூம் சி.சி.டி.வி கேமராக்கள் திடீரென செயலிழந்தன.
Villupuram | விழுப்புரம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் சுமார் 30 நிமிடங்கள் வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
அதாவது, இன்று (மே3,2024) காலை 9.28 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் ஸ்ட்ராங் ரூமுக்கான சி.சி.டி.வி. கேமராக்கள் திடீரென செயல் இழந்தன.
இது குறித்து, வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மீண்டும் 9.56 மணிக்கு சிசிடிவி கேமராக்கள் செயல்படத் தொடங்கின.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், “யு.பி.எஸ்.-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீலகிரி மக்களவை தொகுதியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல் இழந்தன.
அதிக வெப்பம் காரணமாக அவை செயலிழந்தன என அம்மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.