தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வருடம் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்தது. தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்றம், தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க என்று தீர்ப்பளித்தது.தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒரு கேள்விக்கு தலா 4 மதிப்பெண் கணக்கில் 49 கேள்விகளுக்கு மொத்தமாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இ-க்கு உத்தரவு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.