Advertisment

தமிழக கோவில் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது? உச்ச நீதிமன்றம்

தமிழக கோவில் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது. தமிழக கோவில்களில் நிதி முறைகேடு தொடர்பாக பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
Supreme Court

உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. பெரும்பாலான கோவில்களில் இன்னமும் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், “தமிழக கோவில்களில் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது. இந்த கோவில் நிதியை செலவிட ஏதேனும் திட்டங்கள் உள்ளதா? எனக் கேள்வியெழுப்பியது.

தொடர்ந்து, சமூக நலத் திட்டங்களுக்கு நிதியை பயன்படுத்தினால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் சொகுசு காரியங்களுக்கு பயன்படுத்துவது தவறு” எனக் கூறியது. அதாவது, கோவில் நிதியை கல்வி உள்ளிட்ட திட்டங்களுக்கு பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. அதேநேரம், உயர் ரக சொகுசு கார்கள் போன்ற காரியங்களுக்காக பயன்படுத்த கூடாது” எனத் தெரிவித்துள்ளது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment